ராமேஸ்வரம்: தமிழகத்தின் திருச்சியிலிருந்தும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு மார்ச் 30-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் இருந்து நடந்து வந்த விமான சேவை 1983-ல் அந்நாட்டின் உள்நாட்டுப் போரால் நிறுத்தப்பட்டது. 1990-ல் இலங்கை ராணுவத்தால் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.