திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் திருப்பதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ள கோசாலை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், “தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 3 மாதங்களில் மட்டும் திருப்பதி கோசாலையில் நூற்றுக்கும் அதிகமான பசுக்கள், கன்றுகள் சரிவர தீவனம் இல்லாமலும் உயிரிழந்துள்ளன” என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி எம்எல்ஏவாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்த கருணாகர் ரெட்டி குற்றம் சாட்டினார்.