‘அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர்; சில மனிதர்கள்தான் சரியாக இருப்பதில்லை’ என திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கால்நடைகளைப் பலியிடவும், அசைவம் சமைக்கவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக்கோரி மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த சோலை கண்ணன் என்பவரும், திருப்பரங்குன்றம் மலையின் மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை கோரி ராமலிங்கம் என்பவரும், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரி விழுப்புரம் ஸ்வஸ்திஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.