மதுரை: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர் பகுதியில் 2,500 போலீசாரும், புறநகர் பகுதியில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகரில் 2,500 போலீசாரும், திருப்பரங்குன்றத்தில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மூலக்கரை முதல் திருப்பரங்குன்றம் மலை வரை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மதுரை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.