“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் வரப்போகிறது” என்று வட்டமடிக்கும் செய்திகளால் திருப்பூர் மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மக்களும் கலக்கமடைந்து கிடக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழநி முருகனின் தீவிர பக்தர்.
அடிக்கடி ஆர்ப்பாட்டமில்லாமல் பழநிக்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வார். அப்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்கரபாணி தான். இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழநி தனி மாவட்ட கோரிக்கையை வென்றெடுக்க சக்கரபாணி காய்நகர்த்துவதாக உடன்பிறப்புகள் காதைக்கடிக்கிறார்கள்.