இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் டிக்டாக் பிரபலம் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள பாகோ வா கிராமத்தை சேர்ந்தவர் சுமீரா ராஜ்புத். டிக்டாக் பிரபலம். இணையத்தில் இவரை 58 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் திடீரென வீட்டில் இறந்து கிடந்தார். அவரை திருமணம் செய்ய சிலர் முயன்றுள்ளனர்.
ஆனால் சுமீரா மறுத்ததால் அவரை விஷம் வைத்து கொன்றுவிட்டதாக சுமீராவின் 15 வயது மகள் தெரிவித்துள்ளார். தனது தாய்க்கு விஷ மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறியதாக கோட்கி மாவட்ட காவல்துறை அதிகாரி அன்வர் ஷேக் தெரிவித்தார். இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
The post திருமணத்திற்கு மறுத்ததால் பாக். டிக்டாக் பிரபலம் விஷம் வைத்துக்கொலை appeared first on Dinakaran.