சென்னை: திருமா பயிலகம் சார்பில் TNPSC தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
இப்பயிலகத்தில் பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இப்பயிலகத்தில் 27.04.2025 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC- GR-1. GR-2, GR-2A, GR-4, (VAO) & SI தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பின்வரும் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள். மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயிலகத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம். தொடர்புக்கு: சென்னை: 8610392275, அங்கனூர்: 9843660449,ஜெயங்கொண்டம்: 9952860844, சிதம்பரம் 96557 46475, திருப்போரூர் 7092521698,
கும்பகோணம் 7904832410, திருவாரூர்: 8825995117, திருச்செந்தூர்: 8675590803 , கள்ளக்குறிச்சி: 9843702449, நாகப்பட்டினம் 9787825382, நெடுங்குளம் 7639091631 புதுகோட்டை 9443903727 ,குறிஞ்சிப்பாடி 9042991182 , மதுராந்தகம் 9566227765 திண்டிவனம் 9043751262 , வடலூர் 9942389886 ,திருச்சி 8508082300, தஞ்சாவூர் 9600792241 , மணப்பாறை 9942559977 , மின்னஞ்சல்: THIRUMAPAYILAGAM@GMAIL.COM இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருமா பயிலகம் சார்பில் TNPSC தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி தொடக்கம்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.