திருவண்ணாமலை மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் அமோகமாக விற்பனையால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கும் நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல் கின்றனர். இத்தகைய பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் பக்தர்கள் மற்றும் மாநகர மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயண்படுத்துவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.