தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய வட்டங்களில் நேற்று முன்தினம் மழையுடன் வீசிய பலத்த காற்றில், தார்களுடன் முறிந்து சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
திருவிடைமருதூர் வட்டத்துக்கு உட்பட்ட கதிராமங்கலம், தியாகராஜபுரம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, கோவிந்தபுரம், கஞ்சனூர் உட்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் 500 ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, செவ்வாழை கன்றுகளை விவசாயிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் பதியமிட்டனர்.