சிவகாசி: சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றதாக சிவகாசி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
சிவகாசி பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால், உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால், கடந்த டிசம்பர் மாதமே பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது.