
லக்னோ: தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அரசாங்கம் செலவிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
அகிலேஷ் யாதவ் ஒரு கூட்டத்தில் பேசுகையில், “ராமரின் பெயரால் நான் ஒரு ஆலோசனையை வழங்குவேன். உலகம் முழுவதும், கிறிஸ்துமஸின் போது அனைத்து நகரங்களும் ஒளிர்கின்றன, அது பல மாதங்கள் தொடர்கிறது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு ஏன் பணத்தை செலவழித்து, அதில் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்?. இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?. அதை அகற்ற வேண்டும். இன்னும் அழகான விளக்குகள் இருப்பதை உறுதி செய்வோம் " என்றார்.

