கான்பூர்: இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது குறித்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷுபம் துவிவேதியின் மனைவி ஐஷன்யா துவிவேதி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்ட பாணிக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசத்தின் பாதுகாப்புப்படை மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் போராட்டம் தீவிரவாதத்துக்கு எதிரானது. தீவிரவாதத்தை ஒழிக்கவே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. தீவிரவாதம் உள்ள வரை, ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கை தொடரும் என நம்புகிறேன்” என ஐஷன்யா துவிவேதி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தான் ஷுபம் – ஐஷன்யா மண வாழ்க்கையில் இணைந்தனர்.