புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் முழுஆதரவு அளித்துள்ளன. தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன.
ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான எம்பிக்கள் குழு ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் டகேஷி இவாயாவை நேற்று சந்தித்துப் பேசியது. இதுகுறித்து சஞ்சய் ஜா கூறும்போது, “தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான் முழு ஆதரவு அளித்து உள்ளது. இந்தியாவுக்கு துணை நிற்க ஜப்பான் உறுதி அளித்திருக்கிறது” என்று தெரிவித்தார்.