தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு முழுமையாக கணக்கீடு செய்யப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும். ஊழியர்கள் வேறு அனல்மின் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்பது அனைத்தும் வதந்தி தான். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,2,3-யூனிட்கள் பாதிப்பு அடைந்துள்ளது.
The post தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட குழு அமைப்பு appeared first on Dinakaran.