சென்னை-தூத்துக்குடி இடையே நேற்று முதல் கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் விமான சேவையைத் தொடங்கியது.
தூத்துக்குடி விமான நிலையம் வளர்ச்சி பெற்று வருகிறது. பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ என்ற தனியார் விமான நிறுவனம் மூலம் தினமும் 4 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல, பெங்களூருக்கு தினமும் ஒரு விமான சேவை வழங்கப்படுகிறது.