சென்னை: தென்மேற்கு பருவமழை தொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ள அபாய பகுதிகளில் கர்ப்பிணிகளை பிரசவ தேதிக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் 24-7 மணிநேரமும் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். மின்தடை ஏற்பட்டால் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தென்மேற்கு பருவமழை: பொது சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.