கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடும் காயத்திற்கு ஆளான ரிஷப் பண்ட் இப்போது தனது கடைசி கட்ட மறுசிகிச்சைக் கட்டத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டாய்விற்குத் தயாராக இருக்கிறார்.
இதனையடுத்து 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பாதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். இது அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது. அதாவது நவம்பர் 14ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புமாறு அவர் இந்த ரஞ்சி போட்டிகளில் தன் திறமையையும் உடற்தகுதியையும் பரிசோதிக்கவுள்ளார்.