தென் கொரியாவின் போஹாங்கில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு; எஞ்சிய நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற தென் கொரிய கடற்படையின் P-3C ரோந்து விமானம், பயிற்சியின் போது, போஹாங்கிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post தென் கொரியாவின் போஹாங்கில் கடற்படை விமானம் விபத்து: 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.