சென்னை: சர்வதேச பன்னோக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தெற்காசியாவின் நீல புரட்சிக்கு வித்திடும் இந்தியாவின் முதல் ஆழ்கடல் தானியங்கி துறைமுகமாக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் முத்திரை பதித்து வருகிறது.
பன்னாட்டு கடல் மார்க்கத்தில் ஐரோப்பா, பாரசீக வளைகுடா, மற்றும் துபாய், சிங்கப்பூர் போன்ற மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் கடல்சார் மேலாண்மைக்கான இந்திய நுழைவுவாயிலாக உள்ள கேரளாவின் விழிஞ்ஞம் தானியங்கி துறைமுகம் கடந்த மே மாதம் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.