தெலங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில் 6 மாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பத்ராசலம் நகரில் சூப்பர் பஜார் சென்டர் பகுதியில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்து தரை மட்டமானது.