டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 11-வது சுதந்திர தின விழா 1958, ஆகஸ்ட் 15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பிரதமர் ஜவஹர்லால் நேரு பேசும்போது, ‘‘நம் நாடு சுதந்திரம் பெற்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. நம்முடைய முன்னேற்றமும் கண்முன் தெரிகின்றது. அதேநேரம் விலைவாசி உயர்வு நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.
விலைவாசி குறைப்புக்கான நடவடிக்கைகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். நம்முடைய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பது மிகவும் அவசியம். தெற்கே கன்னியாகுமரி, ராமேஸ்வரம் முதல் வடக்கே காஷ்மீர் மற்றும் கிழக்கு மேற்கு என எங்கு இருந்தாலும் இந்தியா என்ற நாட்டை யாராலும் பிரிக்க முடியாது.