ராமேசுவரம்: இந்தியா முழுவதும் தேசிய கடல்சார் மீனவர்களின் கணக்கெடுப்பை நவம்பர் மாதம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் தொடங்குகிறது.
இந்தியாவின் முதல் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (cmfri) ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் 1947ம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்தியாவிலுள்ள பல்வேறு கடலோர மாநிலங்களில் பிராந்திய மையங்களும், பிராந்திய நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த 78 ஆண்டுகளில் இந்த ஆராய்ச்சி நிலையம் பல தனித்துவம் வாய்ந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை செய்து தேசிய மற்றும் உலகளாவிய நற்பெயரினை பெற்றுள்ளது.