திருச்சி: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை. வேந்தருமான கே.ஆர்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். துணைவேந்தர் வி.நாகராஜ், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், மரியா கிளீட், ஷமிம் அகமது, முன்னாள் நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.