தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
பலர் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவப் படிப்பு மாணவர்களின் கல்விக்காக சித்த மருந்து தயாரிக்க பயன்படக்கூடிய 350-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள், மரங்கள் கொண்ட தோட்டம் உள்ளது.