புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகள் நமது தேசிய சொத்துகள் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, “தேசிய நெடுஞ்சாலைகள், நமது தேசிய சொத்துகள். எனவே, அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். கட்டுமானத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், நமது அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பை சரிசெய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.