டெல்லியில் 6 வயது சிறுமியை நாய்கள் கடித்ததில் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது. இந்த விஷயத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.
நாய்க்கடி விவகாரம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதால், இதுகுறித்து நீதிமன்றமே வழக்காக எடுத்து விவாதிப்பது வரவேற்கத்தக்க விஷயமே. கடந்த ஆண்டுமட்டும் நாடு முழுவதும் 37 லட்சத்துக்கும் அதிகமானோர் நாய்க்கடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.