
மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம்.
‘மத்திய’ விசாரணை வளையங்களுக்குள் எக்குத் தப்பாய் மாட்டி இருக்கும் மூத்த முன்னோடிகள் சிலருக்கு மீண்டும் சீட் கொடுத்தால் டெல்லி பார்ட்டிகள் தேவையற்ற குடைச்சல் கொடுத்து தேர்தல் நேரத்தில் குண்டுக் கட்டாய் தூக்கி வைத்து கூட்டணியின் வெற்றிக்கு குண்டுவைக்கப் பார்ப்பார்கள் என்ற அச்சப்படுகிறதாம் தேனாம்பேட்டைத் தலைமை. அதனால், மோஸ்ட் சீனியர்கள் சிலருக்கு ‘விசாரணை வில்லங்கங்களை’ காரணம் காட்டி இம்முறை சீட் கொடுக்க வேண்டாம் என தீர்மானித்திருக்கிறதாம்.

