இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியின் உடல் கிழக்கு காசி மலைகளில் ஜூன் 2ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் காணாமல் போன அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி காஸிபூரில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வழக்கை பொறுத்தவரை மேகாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் என மூன்று மாநில காவல்துறையினரும் வேறு வேறு கூற்றுகளை முன்வைக்கின்றனர்.