குவாஹாட்டி: அசாமில் பஞ்சாயத்து தேர்தல் மே 2, 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்வா நேற்று முன்தினம் தேமாஜி நகரில் பேசுகையில், "அசாமில் கடந்த 2001 முதல் 2016 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை.
தேமாஜியில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் அப்போது இல்லை. 10-ம் வகுப்பிலும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது.