தேர்தல் நடைமுறைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் விரைவில் ஆலோசனை செய்ய உள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.