புதுடெல்லி: “மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தென்னிந்திய மாநிலங்களை பழிவாங்க பாஜக துடிக்கிறது” என்று தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று இன்று நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புகிறது. இந்த நடவடிக்கையால் வட மாநிலங்களுக்குதான் ஆதாயம். இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் என்பது இல்லை. அதனால், தொகுதி மறுசீரமைப்பு என்ற அஸ்திரத்தின் மூலம் தென் மாநிலங்களை பழிவாங்கத் துடிக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் வட மாநிலங்களுக்கு அதிக பலன் கிட்டும்.