நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்கள் குழு வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நேற்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: