நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இதுதொடர்பான அரசு மற்றும் முதல்வரின் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நேற்று முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்தபிறகு தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.