நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூட்டிய கலந்தாய்வு கூட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் தங்களது வீட்டு வாசலில் நின்றபடி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நதிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தாமல், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை பிரச்சினையை கூறி மக்களை திசை திருப்புவதாக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் தங்களது வீட்டு வாசலில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அறிவித்திருந்தது. அந்த வகையில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து திமுக அரசுக்கு எதிராக தங்களது வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.