கோவை: புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து 2 ஆக்ஸில் லாரிகளை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும், வாடகை நிர்ணயத்தில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேஸ் டேங்கர் லாரிகள் இன்று (மார்ச்.27) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தினர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி சாலை, லட்சுமி மில் அருகேயுள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் பேச்சுவார்த்தை இன்று (மார்ச்.27) நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, இரவு 7.45 மணிக்கு நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு சாதகமான முடிவு வரும் வரை லாரிகள் ஓடாது. 3 நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. எனவே, கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.