
கோவை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால் போதுமான பணி ஆணைகள் இல்லை. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பிலும் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளது. ஒரு லட்சம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் நகைகளுக்கான பணி ஆணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

