புதுடெல்லி: ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, அக்டோபர் 9, 2024 உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருந்தார். அதில், டாடா சன்ஸ் பங்குகள் உட்பட தனது செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு விட்டுச் சென்றார்.