திருப்பூர்: கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தொழிற்சங்க விஷயத்தில், ரூ.350 கோடி தொழிற்சங்க சொத்தை அபகரித்துக்கொண்டதாக வைகோ அவதூறான குற்றச்சாட்டு கூறியதாகக் கூறி, சங்கத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சட்டரீதியான நடவடிக்கையை திருப்பூர் சு.துரைசாமி மேற்கொண்டுள்ளார்.
கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.துரைசாமி (90) சார்பில் வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், பாலகுமார் மற்றும் பவித்ராஸ்ரீ ஆகியோர் அனுப்பிய நோட்டீஸின் விவரம்: திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில், 1960-ம் ஆண்டு முதல் திருப்பூர் சு.துரைசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, வயதைத் தாண்டி தொழிலாளர்களுக்கு பணியாற்றி வருகிறார்.