தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0, ஏடிஎம் வசதி உட்பட பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். இதேபோல் குஜராத்தின் நரோடாவில் மண்டல அலுவலகம், ஹரியானாவின் குருகிராமில் ஊழியர் குடியிருப்பு ஆகியவற்றையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: