புதுடெல்லி: தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் பெரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், சர்வதேச அளவில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஒழுங்குமுறை, முதலீடு, வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இன்று இந்தியா நிலையான கொள்கைகளையும் சிறந்த வணிகச் சூழலையும் வழங்குகிறது. நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை முன்னேற்றுவதற்கு பெரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களை (தொழில் நிறுவனங்களை) வலியுறுத்துகிறேன்.