சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 43 வயது பேட்ஸ்மேன் தோனியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சோதனையை எதிர்கொண்டுள்ளது. மூன்று ஆட்டங்களில் இரண்டு தோல்விகளை எதிர்கொண்டுள்ளது சிஎஸ்கே. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான ஆட்டத்துக்கு பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
சிஎஸ்கே விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோனி பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ளார். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான ஆட்டத்தில் தோனி ஏன் முன்னதாக வந்து விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது ஆடுகளம் குறித்து தனது பார்வையை பகிர்ந்திருந்தார் பிளெமிங். தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான ஆட்டத்தில் 16-வது ஓவரில் தோனி பேட் செய்ய களத்துக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.