ஐபிஎல் நிர்வாகத்தின் நடத்தை விதிகளை மீறுவதற்கான தண்டனைகளைப் பொறுத்தவரை, பிசிசிஐ வெவ்வேறு வீரர்களை வித்தியாசமாக நடத்துவதாகவும் ஒரு கண்னில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமாக நடந்து கொள்கிறது என்றும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லெக் ஸ்பின்னர் திக்வேஷ் சிங் ராத்தி, சன் ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மாவுடன் மோதியதால் ஒரு போட்டிக்குத் தடை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மாவுக்கு அபராதமும் தகுதியிழப்புப் புள்ளிகளும் விதிக்கப்பட்டன.