பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதாவது 95.03 சதவீத தேர்ச்சி என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையின் கூட்டு முயற்சியால் கிடைத்த அபார வெற்றியாகும். கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோல, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். வெற்றி பெற்ற மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி புதிய வளரும் துறைகளையும் கண்டறிந்து உயர்கல்வி பெற்று வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டும்.