புதுடெல்லி: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில் முக்கியமாக, அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.100 மதிப்புள்ள தங்க நகையை அடகு வைக்கும்பட்சத்தில் அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெறமுடியும்.