வங்கிகளில் தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது. அத்துடன், ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதும் ஒரு சுமையாகவே விமர்சிக்கப்படுகிறது.
திருமணமோ, மருத்துவமோ முக்கியமான செலவுகளுக்குப் பெரும்பாலானோருக்குக் கைகொடுப்பது நகைக்கடன்தான். மக்கள் தங்களுடைய நகைகளுக்கு ஈடாக வங்கி நிர்ணயிக்கும் பணத்தை மிகக் குறுகிய நேரத்தில் பெற முடிவதும் அரசு வங்கிகளில் அதற்குக் குறைந்த வட்டி செலுத்தினால் போதும் என்கிற நிலையும் நகைக்கடனை நாடவைக்கின்றன.