சென்னை: ரூ.2.5 லட்சம் வரையிலான சிறிய தங்க நகைக் கடன்களுக்கான கடன் மதிப்பு (LTV) தொகை 75%-ல் இருந்து 85% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “தங்க நகைக் கடன் தொடர்பாக முன்னதாக வெளியான வழிகாட்டுதல்கள் ஒரு வரைவு மட்டுமே; அது இறுதியானது அல்ல. அந்த வரைவு வழிகாட்டுதல்களில் புதிதாக எதுவும் இல்லை. இது கடந்த கால விதிமுறைகளின் ஒருங்கிணைப்புதான். நாங்கள் அதை மீண்டும் உருவாக்கியுள்ளோம். தெளிவு இல்லாததால் சில ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs) அதை செயல்படுத்தவில்லை என்பது கவனிக்கப்பட்டது. இப்போது எல்லாம் கருப்பு வெள்ளையில் இருப்பதால்தான் எங்களுக்கு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன..