சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாடு அந்த அணி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அண்மையில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.