சென்னை : நடிகர் வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளோம் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறேன், அங்கே முறையிட்டுக் கொள்ளுங்கள் என்று மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார். நடிகர் சிங்கமுத்து அவதூறாகப் பேசியது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜரானார். வடிவேலுக்கு எதிராக இனி எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
The post நடிகர் வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளோம் : சிங்கமுத்து தரப்பு appeared first on Dinakaran.