திருவனந்தபுரம்: ‘பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவிடம் அவரது சமூக வலைதளப் பக்கம் ஒப்படைக்கப்பட்டது’ என கேரளா காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா எதிர்வினையாற்றியதன் தொடர்ச்சியாக, இரு தரப்புக்கும் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
கேரளா மாநில காங்கிரஸ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், ‘கடந்த வாரம் வங்கி ஒன்று திவலான நிலையில், பாலிவுட் நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தை பாஜக வசம் ஒப்படைத்துவிட்டு ரூ.18 கோடி கடன் தள்ளுபடி பெற்றுவிட்டார். வங்கியில் பணம் போட்டவர்கள் தங்களின் பணத்துக்காக வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர்’ என்று தெரிவித்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா குறித்த செய்தியைப் பகிர்ந்திருந்தது.