அமராவதி/ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர், நதிநீர் பங்கீடு, அரசு ஊழியர்கள் பங்கீடு, நிதி நிலை பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் 10 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் தீர்வு காணப்படாமலேயே உள்ளது.
இதுகுறித்து நேற்று டெல்லியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சிஆர். பாட்டீல் முன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரு மாநில நீர் வளத்துறை அமைச்சர்கள், இரு மாநிலத்தின் தலைமை செயலாளர்கள் மற்றும் இரு மாநில உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.